காலநிலை மாற்றம் குறித்த பரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகுவதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானம் அமெரிக்க நலன்களுக்கும் குடிமக்களுக்கும் தீங்கினை ஏற்படுத்தும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தொலைக்காட்சி உரையாடல் ஒன்றின் போது மக்ரோங் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது அமெரிக்காவிற்கும் அமெரிக்க மக்களின் நலன்களை பொறுத்தவரையிலும் அத்துடன் எமது கிரகத்தின் எதிர்காலத்தை பொறுத்த வரையிலும் ட்ரம்ப் தவறான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முடிவினால் ஏமாற்றமடைந்த விஞ்ஞானிகள், பொறியிலாளர்கள், தொழில் முனைவோர், குடிமக்கள் அனைவரும் தமது இரண்டாவது தாயகமாக பிரான்ஸை காண்பார்கள் என்று கூற விரும்புகின்றேன். இங்கே எம்முடன் பணியாற்றுவதற்காக அவர்களை நான் அழைக்கின்றேன்.
பரிஸ் உடன்படிக்கையை மீற முடியாது என்பதை மீண்டும் தெளிவாக உறுதிப்படுத்துகின்றேன். இந்த உடன்படிக்கை பிரான்ஸால் மாத்திரமல்ல ஏனைய பிற நாடுகளாலும் செயற்படுத்தப்படவுள்ளது. இதனை முழுமையான நடைமுறைப்படுத்தினால் வெற்றிபெறுவோம். எந்தவொரு சூழ்நிலையின் கீழும் குறைந்த இலட்சிய உடன்பாட்டை மறுபரிசீலனை செய்வோம் என்பதை தெரிவிக்கின்றேன். காலநிலை குறித்து கவலையில்லாது தவறாக இருக்காதீர்கள். மற்றுமொரு திட்டம் எம்மிடம் இல்லை. ஏனெனில் மற்றுமொரு கிரகம் இங்கில்லை’ என்று மக்ரோங் தெரிவித்துள்ளார்.
சூழல் வெப்பமடைவதன் காரணமாக உலகிற்கு தீங்கு ஏற்படும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு காலநிலை மாற்ற உடன்படிக்கை பரிஸில் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி பாரிய தொழிற்சாலைகளுக்கான கார்பன் வெளியேற்ற கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இணக்கம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.