திருமணமான ஒரு மாதத்தில் 2 குழந்தைகளின் தாயுடன் ஓட்டம் பிடித்த புதுமாப்பிள்ளையை பொலிசார் தேடி வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகராஜ் (30), இவருக்கும் பேச்சியம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சண்முகராஜ் திடீரென காணாமல் போனதால் பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், சண்முகராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.
திருமணத்துக்கு பின்னரும் அந்த பெண்ணுடனான கள்ளக்காதலை சண்முகராஜூவால் கைவிட முடியவில்லை.
இதனால் அப்பெண்ணுடன் ஓட்டமெடுத்த சண்முகராஜ் ரகசியமாக குடும்பம் நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் சண்முகராஜ் மற்றும் அவருடைய கள்ளக்காதலியை தேடி வருகிறார்கள்.