அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (6) வீடுகளை திறந்து வைத்துள்ளார்.
3.56 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தில் உள்ள ஏதிலிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை – தேக்காட்டூர் பகுதியில் புதிதாக 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
2.03 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் எட்டயபுரம் – குளத்துள்வாய்பட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 40 வீடுகளும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சிவகாசி – ஆனைக்குட்டம் பகுதியிலும் இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டதாகவும் இந்திய தமிழ் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.