அவுஸ்திரேலியாவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் விமானத்தில் தற்கொலை தாக்குதலை மேற்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை முறியடித்துள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது.
லெபனானின் உள்துறை அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.லெபனானை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியொருவரே இந்த தாக்குதலை திட்டமிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அபுதாபிக்கு செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் இடம்பெறவிருந்த அனர்த்தத்தை எங்கள் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர்,லெபனான் பிரஜையொருவரே இதனை செய்வதற்கு திட்டமிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தரகெகையாட் என்ற லெபனான் தற்கொலை குண்டுதாரியே இந்த தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்,அவருடன் வேறு மூன்று பேர் இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளனர் அவர்களில் ஒருவர் லெபனானில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் மற்றுமொரு நபர் சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் மூத்த உறுப்பினராக உள்ளார் என லெபனான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நான்கு சகோதரர்களே இந்த தாக்குதலை திட்டமிட்டனர் அவர்களிற்கு தனிப்பட்ட பகை ஏதோ உள்ளது அவர்களில் ஒருவர் சிரியாவின் ரக்காவிற்கு சென்று ஐஎஸ் அமைப்புடன் இணைந்துள்ளார்.
அவரை எங்கள் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர் என லெபனான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விமானம் புறப்பட்டு 20 நிமிடங்களில் அதில் குண்டு தாக்குதலை மேற்கொள்வதே அவர்களின் திட்டம் எனினும் பிரயாண பொதிகளினால் அவர்களின் தாக்குதல் சாத்தியமாகவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சகோதரர்களில் ஓருவரால் பாதுகாப்பு சோதனைகளை தாண்டி உள்ளே செல்ல முடியலில்லை என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
120 லெபனான் பயணிகள் உட்பட 400 பேருடன் பயணிக்கும் விமானத்தை சிறிய பார்பி பொம்மையை பயன்படுத்தி அந்த வெடிக்க வைக்க முயன்றார் என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்