மத்திய அமெரிக்காவை ஊடறுத்துச் செல்லும் வெப்பமண்டல புயல்காற்றான ‘நேட்’ காரணமாக குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் அதிகமானோரை காணவில்லை என்று தெரிவிக்கப்படுளகின்றது.
அமெரிக்காவிலிருந்து வடக்கு நோக்கி நகரும் இந்த புயல்காற்று காரணமாக கொஸ்டா ரிகா, நிகரகுவா மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய பகுதிகளே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக மத்திய அமெரிக்க நாடுகளில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புயல்காற்று கனமழை, மண்சரிவு, வெள்ளப்பெருக்குக்கு வழிவகுத்துள்ளது. அதன்காரணமாக போக்குவரத்துக்கள் யாவும் தடைப்பட்டுள்ளதுடன் வீடுகள், பாலங்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ளது. கொஸ்டாரிக்காவில் சுமார் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் வடக்குநோக்கி நகரும் இந்த புயல்காற்று காரணமாக குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்ததாகவும் நிகரகுவாவில் 11 பேர் உயிரிழந்ததாகவும் ஹொண்டுராஸில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஹொண்டுராஸில் உயிரிழந்த மூவரில் இரண்டு இளைஞர்கள் நதியில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை எல் சல்வடொரில் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொஸ்டாரிக்காவில் அனைத்து ரயில் மற்றும் விமான போக்குவரத்துக்கள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் கவரக்கூடிய டசின் கணக்கான தேசிய பூங்காக்கள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. நிகரகுவாவிலேயே பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்புயல் வலுவடைந்து முதலாம்நிலை சூறாவளியாக மாறி, அமெரிக்காவின் தெற்குக் கடற்கரையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கடக்கும் என்று தட்பவெட்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.