கதலோனியா சுதந்திரம் பெற்றுள்ளமைக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை, அதன் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) வெளியிட்டுள்ளார்.
ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரும் கதலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு, இம்மாதம் முதலாம் திகதி நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 2.3 மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து 90 சதவீதமான மக்கள் வாக்களித்த அதேவேளை, எதிராக 43 சதவீதமான மக்கள் வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்பெய்னிலிருந்து கதலோனியா சுதந்திரம் பெற்று தனி நாடாகும் ஒப்பந்தத்தில் கதலோனியத் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் மற்றும் ஏனைய அதிகாரிகளும் கடந்த வாரம் கைச்சாத்திட்டிருந்தனர்.
இருப்பினும், ஸ்பெய்ன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும்வரை இதை அமுல்படுத்துவதை நிறுத்திவைப்பதாக கதலோனியத் தலைவர் ஏற்கெனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஸ்பெய்ன் அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் கதலோனியா சுதந்திரம் பெற்றுள்ளமைக்கான அறிவிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) கதலோனியத் தலைவர் அறிவித்துள்ளார்.