அனுராதபுரம் – அவுகண புத்தர் சிலை அமைந்துள்ள பகுதியை சுத்தம் செய்து, மலர் தூவி, விளக்கேற்றி பூஜை செய்து தியானத்தில் ஈடுபட்டு வருகிறார் ஆஸ்திரிய பிரஜை ஒருவர்.
மேலும், அவுகண புத்தர் சிலை குறித்த சிங்களப் பாடல் ஒன்றையும் இவர் பாடிவருவதாக தெரியவந்துள்ளது.
ஜோசப் பிரிடீசர் என்ற இவர் ஒரு பொறியியலாளராகும்.
கடந்த 1988ம் ஆண்டு முதல், தனது விடுமுறைகளில் அவுகண பிரதேசத்திற்கு வரும் இவர், இந்த புத்தர் சிலை மீது மிகவும் அன்பு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவுகண புத்தர் சிலை எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அவுகண வந்த இவர், தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்கின்றார்.
அங்கு வரும் போதெல்லாம் புத்தர் சிலை அமைந்திருக்கும் இடத்தை சுத்தம் செய்யும் ஜோசப், தியானம் செய்வதை விட, இந்த இடத்தை சுத்தம் செய்யும் போது தனது மனம் சுத்தமாவதாகவும் இது மிகப் பெரிய புண்ணியம் எனவும் கூறியுள்ளார்.
இன்னும் மூன்று மாதங்களில் தனக்கான விடுறை முடிந்ததும் தனது நாட்டுக்கு சென்று விட்டு, அடுத்த வெசாக் பௌர்ணமியில் மீண்டும் இலங்கை வந்து, அவுகண விகாரையில் துறவறம் பூண எதிர்பார்த்துள்ளதாக, ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.
பல வருடங்களாக அவுகணவுக்கு வந்து செல்லும் இவரை, அப் பகுதி மக்கள் “அவுகண சுத்தா” என்று அன்புடன் அழைத்து வருகின்றனர்.