திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினாறு வயதுடைய மருமகளுக்கு ஆபாச படங்களை காண்பித்த மாமனார் ஒருவரை இன்று (26) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுமி தங்கியிருந்த வீட்டில் குடும்ப முறுகல் ஏற்பட்டிருந்தது.
அதனை காரணம் காட்டி சிறுமியை அவரது தாயாரிடம் அழைத்துச் செல்வதாக கூறி சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று சந்தேக நபரின் வீட்டில் தங்கவைத்திருந்தார்.
இந்தநிலையில், சிறுமியை வன்மமான முறையில் நடத்தியதாகவும், ஆபாச படங்களை காட்டியதாகவும் சிறுமி தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாயாரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.