திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் நேற்று(28.12.2023) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறி்யுள்ளார்.
டெங்கு நோயின் தாக்கம்
இது தெடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில்17 இடங்களில் டெங்கு தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் தவிர்ந்த ஏனைய இடங்களில் டெங்கு பரவும் அபாயம் ஓரளவு கட்டுப்பாட்டிட்குள் இருக்கின்றது.
டெங்கு தொடர்பில் ஆய்வு செய்த போது அதிகளவிலான இடங்களில் குடம்பிகள் காணப்பட்டடது இதனால் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.
அதிஷ்டவசமாக கடந்த இரண்டு மூன்று மாதங்களாக டெங்கு நோயின் தாக்கமோ மரணங்களோ கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவில்லை.
ஆகவே மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதோடு, சுற்று புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.