வேலூர் அடுக்கம்பாறை அரச வைத்தியசாலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான பேரறிவாளனுக்கு மூட்டு வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேலூர் சிறச்சாலையில்; அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீரக தொற்று மற்றும் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாதந்தோறும் வேலூர் அரச வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டு வருகின்றது.
பேரறிவாளன் 2 மாதம் பரோலில் சென்றபோது ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பரோல் முடிந்து கடந்த 24-ந்தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்று அவரை வேலூர் அடுக்கம்பாறை அரச வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுநீர், ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மூட்டு வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையிலான பொலீசார் பேரறிவாளனை பாதுகாப்புடன் அரச வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.