ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் தாய் சு யிங்கிடம் தோல்வியடைந்தார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் பிவி சிந்து, முதல் இடத்தில் இருக்கும் சீனாவின் தை சு யிங்கை எதிர்கொண்டார்.
அரையிறுதி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவி சிந்து இறுதிப் போட்டியில் பதற்றத்துடன் விளையாடினார். முதல் செட்டில் 2-5 என பிவி சிந்து பின்தங்கியிருந்தார். அதன்பின் 5-7 என சற்று முன்னேறினார். பின்னர் 11-13 என பின்தங்கினார்.
ஒரு கட்டத்தில் பிவி சிந்து 13-17 என பின்தங்கிய நிலையில் இருந்தார். பின்னர் 18-18 என சமநிலைப் பெற்றார். ஆனால் நம்பர் ஒன் வீராங்கனை தாய் சு யிங் கடைசி மூன்று புள்ளிகளையும் பெற்று 21-18 என முதல் செட்டை கைப்பற்றினார்.
முதல் செட்டை இழந்த பிவி சிந்து 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் 7-7 என சமநிலை பெற்ற நிலையில், 10-8 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் சாய்னா ஒரு புள்ளி எடுக்க, தாய் சு யிங் 4 புள்ளிகள் பெற சிந்து 11-12 பின்தங்கினார்.
அதன்பின் 17-12 என அதிக அளவில் முன்னிலைப் பெற்றார். அதன்பின் 13-18, 16-19 என பின்தங்கிய பிவி சிந்து இறுதியில் 2-வது செட்டை 18-21 இழந்து நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.