Loading...
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்திற்கு வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் சென்றுள்ளனர்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய பின்வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்திற்கு இவர்கள் சென்றுள்ளமயும் குறிப்பிடத்தக்கது.
இதில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு மாவீரர்களின் பெற்றோர்கள் பொது மக்கள் மற்றும் பலர் குறித்த இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
Loading...
சுமார் 11 மணியளவில் மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...