Loading...
திருகோணமலை வான் எல பொலிஸ் பிரிவுற்க்கு உட்பட்ட மணிராசன்குளம் பிரதேசத்தில் கேப் வாகனம் ஒன்று மரத்துடன் மோதியதில் அதில் பயணித்த 11 பேர் காயமடைந்தனர்.
இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காயமடைந்த 11 பேரும் திருகோணமலை தம்பலகாமம் ஆடைத்தொழிற்சாலையின் பெண் ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
காயமடைந்தவர்களை அதிகாரிகள் கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
அதில் ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர பிரிவில் அனுமதித்ததாக வான் எல பிரதேச பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...