அ.தி.மு.க. தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் டி.டி.வி. தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோன்று ‘மக்கள் விழிப்படைந்து விட்டார்கள் நாம் வெற்றிபெறுவது உறுதி’ என பிரசாரங்களைச் செய்துவந்த தி.மு.க. கட்டுப்பணத்தையும் இழந்து தோல்வியடைந்துள்ளது.
காலையில் இருந்து இடம்பெற்ற 19 சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலையில் நின்று, ஒரு இடைத் தேர்தலில் முதல் தடவையாக அமோக வெற்றிபெற்ற வேட்பாளர் என்னும் பெருமையை தினகரன் பெற்றுள்ளார்.
இவரின் வாக்கு வித்தியாசம் ஜெயலலிதாவின் தொகையையும் விட அதிகம் என்பதால் இவரின் வெற்றியை மாபெரும் வெற்றியாக தினகரன் தரப்பு தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது.
இதேவேளை அ.தி.மு.க. 48,306 இடங்களை பெற்று இரண்டாவது நிலையில் உள்ளது. இந்நிலையில் தினகரன் அணியினர் வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.