அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தொடர்பில் திருப்தி கொள்ள முடியாதுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கவலை வெளியிட்டுள்ளார்.
திருகோணமலையில் நேற்றையநாள் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மக்களும் குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்த இரா.சம்பந்தன்
அதற்காக அதனை கைவிட முடியாதெனவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசாங்கம் ஏற்றுக்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள இரா.சம்பந்தன்
உரிய நேரத்தில் அமுல்படுத்தப்படா விட்டால் அதற்கான விளைவுகள் நிச்சயம் இருக்குமென குறிப்பிட்டுள்ளார்.