Loading...
மூதூர் மஹாவலி கங்கை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்டபோது கங்கை பாலத்தில் நேற்றையதினம்(20-03-2018) செவ்வாய்கிழமை பாய்ந்து தப்பிக்க முயற்சி செய்த நபா் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
குறித்த நபா் கங்கை பாலத்தில் விழுந்து தப்பிக்க முற்பட்டவேளை காணாமல் போன கிண்ணியா பைசல் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Loading...
பொது மக்களுடன் இணைந்து கடற்படையினர் கங்கை பாலத்தின் கீழ் தேடுதல் மேற்கொண்டபோதே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...