கொழும்பு மாநகர சபையின் கன்னியமர்வில் உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் தேநீருக்காக சுமார் 15 இலட்சம் ரூபா செலவிடப்பட்ட அதிர்ச்சித் தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரான மிகார குணரத்ன இந்த தகவலை கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளியிட்டார்.
மதியபோசன செலவுகளாக 10 இலட்சம் ரூபா பதிவாகியிருப்பதாகவும், மாலைநேர தேநீருக்காக சுமார் 5 இலட்சம் செலவிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செலவுகளை மேற்கொண்டமைக்கான ஆதாரமாக கொழும்பு மாநகர சபையிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆணவமொன்றையும் ஊடகங்களுக்கு முன்பாக அவர் முன்வைத்தார்.
கொழும்பு மாநகர சபையில் சுமார் 110 உறுப்பினர்கள் உள்ள அதேவேளை 500 பேருக்கான உணவு பொதிகள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த செயற்பாடு ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் கூறினார்.