இலங்கையில் சில சிங்கள அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, யாழில் டான் TV யை நடத்தி வந்த குகநாதன் பிரான்ஸ் நாட்டுக்கு தப்பியோடியுள்ளார் என அதிர்வின் யாழ் புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழில் ஏ.ஸ்.கே கேபிள் விஷன் என்னும், நிலையத்தை தொடங்கி. அதனூடாக சுமார் 1 லட்சத்தி 30,000 ஆயிரம் கேபிள் TV இணைப்புகளை கொடுத்து. அதனூடாக மாத வருமானமாக பெரும் கோடிகளை சம்பாதித்தவர் இந்த குகநாதன். இவர் தனது தொலைக்காட்சியான டான் TV யையும் இதனூடாக விட்டு பெரும் அரசியல் செல்வாக்கை பெற்றார்.
ஆனால் தான் வெறும் 1,000 (ஆயிரம்) இணைப்புகளை மட்டுமே யாழில் விட்டதாக கூறி. இவர் இதற்கான வரியை செலுத்தி வந்துள்ளார். மிக மிக குறைவான வரி செலுத்தி வந்த இவர் பல தில்லு முல்லுகளிலும் ஈடுபட்டு வந்த நிலையில். வருமான வரித்துறையினர் இவரை கைசெய்ய நடவடிக்கை மேற்கொண்டதோடு. இவரோடு ஒட்டி உறவாடிய சில அரசியல்வாதிகளுக்கும் இவருக்கும் இடையே சில டீல் கள், நடக்காமல் போகவே அவர்களும் இவரை காலை வாரினார்கள்.
துல்லிய ஒளிபரப்பு இல்லாமல், மக்களிடம் பெரும் பணத்தை மாதாந்தம் வசூலித்துக்கொண்டு , பெரும் ஏமாற்று வேலைகள் செய்த குகநாதன் தற்போது யாழ்ப்பாணத்தை விட்டு தப்பியோடி பிரான்ஸ் சென்றுவிட்டார்.