இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இன்று காலை ஆரம்பமாகியது.
தம்புள்ளையில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களை குவித்தது.
குசல் ஜனத் பெரேரா 81 ஓட்டங்களையும் திஸர பெரேரா 49 ஓட்டங்களையுமே அதிகமாக பெற்றனர்.
தென்னாபிரிக்கா பந்துவீச்சில், தப்ரையாஸ் ஷம்சி, கஜிஸோ றபாடா ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
194 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தென்னாபிரிக்கா அணி துடுப்பெடுத்தாடியது.
31 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தென்னாபிரிக்கா அணி வெற்றி இலக்கையடைந்து.
ஜெ.பி டுமினி ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும், பப் டு பிளெஸி 47 ஓட்டங்களையும் தென்னாபிரிக்கா சார்பில் குவித்து போட்டியில் வென்றனர்.