அன்றாட பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் பூண்டு பிரதான இடம் வகிக்கின்றது.
எனினும் அதிகம் பூண்டு எடுத்து கொண்டாலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் பூண்டு எடுத்துக்கொள்வதால் பல விதமாக பக்க விளைவுகள் ஏற்படும் என தெரியவநதுள்ளது.
சமையலறையின் முக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று தான் இந்த பூண்டு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூண்டை உணவில் சேர்த்து வருவதுண்டு.
பூண்டு ஒரு சிறந்த மருந்து என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயமாகும்.
பூண்டின் மருத்துவ குணம் பல்வேறு நோய்கள் வரமால் பாதுகாப்பதற்கு உதவுகின்றது. எனினும் அதிகமான அளவு பூண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும் என தெரிந்து கொள்வோம்?
* உடலை சுத்தமாக இருந்தாலும் உடலில் ஒரு வித துர்நாற்றம் வீசும்.
* சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு உண்டாகலாம்
* சரும தடிப்பை ஏற்படுத்தக் கூடும்.
* பச்சை பூண்டு எடுத்து கொண்டால் தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.
* தலைவலி செயல்பாட்டை ஊக்குவிக்கும்
* முக்கோண நரம்பு தூண்டப்பட்டு, ந்யுரோபெப்டிடு வெளியாவதை ஊக்கும்.
பூண்டில் உள்ள அல்லிநேஸ் என்னும் என்சைம், பொதுவாக சரும தடிப்பை ஏற்படுத்த கூடும்.. பூண்டு உறிக்கும்போது அல்லது வெட்டும்போது, கையில் கையுறைகள் அணிந்து கொள்வது சிறப்பானதாக இருக்கும்.
எனவே அதிகமாக பச்சை பூண்டு சாாப்பிடுவதனை தவிர்ப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.