இலங்கைக்கு எதிரான 2து ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.
தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்ற போட்டியில் இலங்கையின் சொதப்பல் காரணமாக இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களினை இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அஞ்சலோ மெத்தியூஸ் 79 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 69 ஓட்டங்களையுமே அதிகபட்சமாக பெற்று கொண்டுள்ளனர்.
245 என்ற வெற்றி இலக்கினை நோக்கி தென்னாபிரிக்க அணி களமிறங்கியது.
டீகொக் மற்றும் அம்லா ஜோடியின் சிறப்பான துடுப்பாட்டம் தென்னாபிரிக்காவின் வெற்றியை உறுதி செய்தது.
இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்றது. இந்த வெற்றியுடன் 5 போட்டியை கொண்ட ஒரு நாள் தொடரில் தென்னாபிரிக்கா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.