தென்னாபிரிக்காவுக்கு எதிரான நான்காவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
பரபரப்பான போட்டியில் மூன்று ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றியீட்டியது.
இதன் மூலம் முகங்கொடுத்து வந்த தொடர் தோல்விகளுக்கு இலங்கை ஓர் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மழை காரணமாக நான்காவது ஒருநாள் போட்டியில் மட்டுப்படுத்தப்பட்ட 39 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக் கொண்டது.
307 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது.
எனினும் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக தென்னாபிரிக்க அணிக்கு 21 ஓவர்களுக்கு 191 ஓட்டம் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அம்லாவும் – டீகொக்கும் இணைந்து இலங்கை அணிக்கு ஆட்டம் காட்ட ஆரம்பித்தனர். 2 விட்கெட்டுகளை இழந்த பின்னர் ஜே.பி.டூமினியுடன் இணைந்த ஹஸிம் அம்லா அதிரடியாக ஆட ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க அணி ஒன்பது ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை எட்டியது.
எனினும் இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சு காரணமாக 187 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டு தென்னாபிரிக்கா அணி மூன்று ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.
ஆட்ட நாயகனாக இலங்கை அணிக்காக 34 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த தசூன் சானக்க தெரிவு செய்யப்பட்டார்.