Loading...
பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்த வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட பெண்களை சமுதாயத்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டுமெனவும் கோரி பாதிப்புக்குள்ளான பெண்கள் பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர்.
மராட்டிய மாநிலம்- மும்பை, சுன்னாப்பட்டி சோமையா மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி எதிர்வரும் 22ஆம் திகதி டெல்லியை அடையவுள்ளது.
Loading...
ராஷ்டீரிய கரிமா அபியான் என்ற தன்னார்வ அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் இப்பேரணி நடத்தப்படுகின்றது.
குறித்த பேரணியில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆகியோரும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...