ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விண்வௌி வீரர் அலெக்சாண்டர் கேர்ஸ்ட் சர்வதேச விண்வௌி நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளார். விண்வௌி வீரருக்கு விடுமுறை வழங்கும் நோக்கில் அவரை ஐரோப்பிய விண்வௌி முகவரகம் மீள அழைத்துள்ளது.
அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று மாலை (வியாழக்கிழமை) கொலொங்க் விமான நிலையத்தில் இடம்பெற்றது. அதன்பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.
அவர் உட்பட மேலும் இரண்டு சர்வதேச விண்வௌி வீரர்கள் நேற்று பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் வந்த சோயுஸ் விண்கலம் கஸகஸ்தானில் உள்ள சர்வதேச ஏவுதளத்தில் தரையிறங்கியது.
கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு இடம்பெற்ற முதல் மீள்வருகை இதுவாகும். அமெரிக்காவின் விண்வௌி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் விண்வௌி வீரர் அலெக்ஸி ஒவ்சினன் ஆகியோர் சென்ற விண்கலம் விண்வௌியை அண்மித்த போது தொழிநுட்ப பிரச்சினை காரணமாக செயலிழந்த போதும் அவர்கள் பாதுகாப்பாக கஸக் ஏவுதளத்திற்கு பாதுகாப்பாக திரும்பியிருந்தனர்.
இந்தநிலையில் ஐரோப்பிய விண்வௌி முகவரகத்தின் அலெக்சாண்டர் கேர்ஸ்ட், நாசாவின் செரீனா அனொன் மற்றும் ரஷ்யாவின் சேர்ஜி புரோகொப்யேவ் ஆகியோர் கிழக்கு நேர வலயத்தின் படி நள்ளிரவு 12:02 க்கு (11:02 a.m. local time, 0502 GMT) பூமியை வந்தடைந்ததாக நாஸா தெரிவித்துள்ளது.
கேர்ஸ்ட் கடந்த 363 நாட்களாக சர்வதேச விண்வௌி நிலையத்தில் ஐரோப்பிய விண்வௌி முகவரகத்திற்காக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.