புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகினால் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு தயா ரத்நாயக்கவை நியமிப்பதற்கு தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இப்போதைக்கு, அவர் அந்த பட்டியலில் இருந்து விலகிச்சென்றுள்ளார்.
இதற்கு காரணம் தயா ரத்நாயக்க தேசிய மக்கள் இயக்கத்திலிருந்து தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் முன்னாள் ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அதன்படி, தயா ரத்நாயக்க ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய மக்கள் இயக்கத்தில் போட்டியிடுவதைத் தவிர்த்தத்துடன், தேசிய மக்கள் இயக்கத்திலிருந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயா ரத்நாயக்க மேற்கொண்ட ஏற்பாடுகள் அவரை தற்போதைய பாதுகாப்பு செயலாளராக நியமிக்க தகுதியற்றவை என்பதை உள் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
இதற்கிடையில், பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கமல் குணரத்ன தொடர்பாக
ஒரு கருத்தரங்கில் அவர் கூறிய சர்ச்சைக்குரிய அறிக்கையின் காரணமாக மீது சர்ச்சைக்குரிய நிலைமை எழுந்துள்ளமையானது, அவர் வெளியிட்ட கருத்தினாலாகும்.
அரசியலமைப்பில் உடன்படாதவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்ற கமல் குணரத்ன வியத்கமவில் தெரிவித்த கருத்து மிகவும் தீவிரமான விடயமானதால் ஒட்டுமொத்தமாக நாட்டில் ஜனநாயகம் சவால் செய்யப்படுகிறதா என்ற கேள்வி இப்போது உருவாகி வருகிறது.