நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் காணொளி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நித்தியானந்தாவுக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் படித்த தனது மகளை மீட்டுத்தருமாறு இளம் பெண் ஒருவரின் பெற்றோர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மா நித்தியானந்தா என்ற பெயரில் பேஸ்புக்கில் அந்த காணொளி வெளியாகி உள்ளது. அதில், “எனக்கு 18 வயசாகுது.. என்னை யாரும் கடத்தவில்லை. நான் பத்திரமாக இருக்கேன்.. என் விருப்பப்படியேதான் இருக்கிறேன்.. எங்கு வேண்டுமானாலும் போறேன், வருகிறேன்.
ஆனால், நான் கடத்தப்பட்டதாகக் கூறி சொல்லி, எனக்கு மனஅழுத்தத்தை தருகிறார்கள். எனக்கு இங்கே நித்தியானந்தா ஆசிரமத்தில் எந்த தொந்தரவும் இல்லை
பெற்றோரை பார்க்க எனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். மகள் வேண்டும் என்று போராடி கொண்டிருக்கும் நிலையில் திடீர் திருப்பமாக இப்படி ஒரு காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லை குடும்பத்தில் உள்ளவர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.