நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பிரதான நகரில் இன்று காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் இருந்த சில்லறை கடை, இறுவட்டு கடை, பழக்கடை மற்றும் வடைக்கடை ஆகியவையே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.
இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை. பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
பிரதேச பொது மக்கள், நோர்வூட் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும் வர்த்தக நிலையங்களின் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.