மேலும், தேர்தல் நேரத்தில் மட்டுமே திமுக மக்களைச் சந்திக்கிறது. மக்களைக் குழப்பி, வாக்குகள் பெற முயற்சி செய்கிறது. ஆயிரக்கணக்கான போராட்டத்தை நடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின். எதுக்கு எடுத்தாலும் போராட்டம் செய்வதையே ஒரு பொழப்பாக நடத்துகிறார். நேற்று என்ன போராட்டம் எதற்காக நடத்தினோம் என மு.க.ஸ்டாலினுக்கே தெரியாது என்று ரவீந்திரநாத் குமார் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.