தேவைகள் பூர்த்தியாக செந்தில்வடிவேலனை வழிபட வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். திடீர் பயணமொன்றால் தித்திக்கும் செய்தி வந்து சேரும். நல்லவர்களின் நட்பு கிட்டும்.
வருமானம் பெருக வடிவேலனை வழிபட வேண்டிய நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். இடமாற்றம், வீடு மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் மேலோங்கும்.
முன்னேற்றம் பெருக முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். நீண்டதூர பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
சிந்தனைகளில் வெற்றி பெற சிவ மைந்தனை வழிபட வேண்டிய நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். மேலதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு ஆச்சர்யப்படுவர். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
வெற்றிகள் வந்து சேர வேலவனை வழிபட வேண்டிய நாள். மாற்றங்களைச் செய்ய முன்வருவர். கூட்டுத் தொழிலில் மாற்றங்களைச் செய்ய முன்வருவர். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாகவே நடைபெறும்.
சந்தோஷம் பெருக சண்முகநாதரை வழிபட வேண்டிய நாள். வருமானம் உயரும். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும்.
காரியங்களில் வெற்றி பெற கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் தாமதப்படும்.
சிறப்புகள் வந்து சேர செல்வமுத்துக் குமரனை வழிபட வேண்டிய நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிட்டும்.
தீப வழிபாட்டால் திருப்தி காணவேண்டிய நாள். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
ஆனந்தம் பெருக ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.
வேலவன் வழிபாட்டால் வெற்றிச் செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் கூட்டாளிகளால் லாபம் உண்டு. பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
செல்வாக்கு உயர செந்தில் வடிவேலனை வழிபட வேண்டிய நாள். யோசிக்காமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.