லாபகரமான நாள். எடுத்த காரியம் இனிதே முடிவடையும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழும் சூழ்நிலை அமையும்.
திறமைகள் பளிச்சிடும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். உத்தியோக முயற்சி கைகூடும். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சினைகள் அகலும். வரவேண்டிய பணத்தை பேசி வசூலிக்க முற்படுவீர்கள்.
குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களுக்காக பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது உங்கள் புத்திசாலித்தனமாகும்.
யோசித்தும், பூஜித்தும் செயல்பட வேண்டிய நாள். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து நெருக்கடியைக் கொடுக்கலாம். நண்பர் ஒருவரைப் பார்க்க நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகும்.
எதிர்ப்புகளைச் சமாளித்து ஏற்றம் காண வேண்டிய நாள். வியாபாரம், தொழில் சம்மந்தமாக புதிய நபர்களைச் சந்திக்க நேரிடும். தேக நலன் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.
கூட்டாளிகளால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம்.பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்.
பூர்வீக சொத்துக்களால் நன்மை ஏற்படும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வரும் வாய்ப்பு உண்டு. சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். வரவு திருப்தி தரும்.
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணை புரிவர். உடன்பிறப்பகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.
பொன்னான நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். மயில்வாகனனை மறவாமல் வழிபடுவது நல்லது. தனவரவு தாராளமாக வந்து சேரலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுத்துதவும். திடீர் பயணமொன்றால் வழக்கமான பணிகளை மாற்றியமைப்பீர்கள்.
பாக்கிகள் வசூலாகும் நாள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையில் இழுபறிநிலை நீடிக்கலாம். மறதி அதிகரிக்கும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். தொலை பேசி வழியில் தொழில் வளர்ச்சிக்கு நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோக அனுகூலம் உண்டு.