யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ப்ரவுன் சுகர் என்ற ஹெரோய்னுடன் நேற்று கைதுசெய்யப்பட்டவர் மீக நீண்டகாலமாக அதனை தொழிலாக மேற்கொண்டு வருவதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது
யாழ்ப்பாண மதுவரித்திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது
இலங்கையின் கடற்படையினரும், மதுவரித்திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்ட சோதனையின் போது 60 வயதாக அவரிடம் இருந்து 2 கிலோ கைப்பற்றப்பட்டது. இதன்போது அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் தாம் இந்தியாவில் இருந்து படகு மூலம் போதைப்பொருளை கடத்தி, கொழும்பில் விநியோகித்து வந்தமையை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்காக தாம் யாழ்ப்பாண கொழும்பு சொகுசு பேரூந்துகளை பயன்படுத்தியமையையும் சந்தேகநபர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று மது வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.