Loading...
இலங்கையை சேர்ந்த மீனவர் ஒருவர் அமெரிக்காவில் புகலிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜ் என்ற மீனவரே இவ்வாறு புகலிடம் கோரியுள்ளார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக ராஜ் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
Loading...
அங்கிருந்து அமெரிக்கா நோக்கி சென்றுள்ளார். இவர் தொடர்பில் தற்போது முதன்முறையாக தகவல் வெளியாகியுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டத்திட்டங்களுக்கமைய ராஜ் நாடு கடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் தான் இலங்கை செல்வதனை தடுக்குமாறு ராஜ் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading...