ஸ்பெயின் கடற்கரையில் பிரித்தானியா இளம்பெண் ஒருவர் மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோரியன் கடற்கரையில் Benicassim இசை திருவிழா நடந்த பகுதிக்கு அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தின் போது, கடற்கரையில் மயங்கிய நிலையில் கிடந்த 21 வயதுடைய பிரித்தானியா இளம்பெண்ணை மீட்ட பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தாக்குதல் குறித்து தனக்கு நினைவில் இல்லை என பாதிக்கப்பட்ட பெண் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஸ்பானிஷ் நபர் ஒருவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகமடைந்துள்ள பொலிசார் சந்தேக நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகள் ஆய்வு செய்து வரும் பொலிசார், கடற்கரையில் தடயவியல் ஆதாரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதல் இசை திருவிழாவில் நடைபெறவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள நிலையில் பாதிக்கப்ட்ட பெண் இசை திருவிழாவிற்கு வந்தவரா அல்லது அப்பகுதிக்கு சுற்றுலா வந்தவரா என்பது தற்போது வரை தெளிவாக தெரியவில்லை.
நான்கு நாட்கள் நடைபெற்ற இலை திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் பாதி பேர் பிரித்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.