தெஹ்ரான் உலக நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கடைப்பிடித்து செயற்பட வேண்டும். இல்லையேல் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஈரானிய ஒப்பந்தமே, நான் இதுவரை கண்டிராத மிக மோசமான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் செயற்படுமாயின் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
மேலும், அமெரிக்காவை ஆட்சிசெய்த ஆபிரகாம் லிங்கனை தவிர எந்தவொரு ஆட்சியாளரும் செயற்படாத அளவிற்கு மிகுந்த உத்சேகத்துடனும், அர்ப்பணிப்புடனும் நான் செயற்படுவேன் என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன்.
நான் ஜனாதிபதியாக பதவியேற்ற ஆறு மாதத்திற்குள், தேர்தல் காலத்தில் வழங்கிய சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்கல் மற்றும் சுகாதார சீர்த்திருத்தங்கள் போன்ற பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். இதற்கு முன்னர் பெரும்பாலும் எந்தவொரு தலைவரும் இவ்வாறு குறுகிய காலத்திற்குள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்றார்.