அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுகத்துள்ளது.
விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு கடினமான கேள்விகளை வழங்குவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது
இதற்காக கடினமான கேள்விகளை கொண்ட வினாக்கொத்தை டிரம்ப் நிர்வாகம் தயாரித்துள்ளது.
இந்த ஆவணத்தை இராஜாங்க திணைக்களம் பெடரல்ரிஜிஸ்டரில் நேற்று வெளியிட்டுள்ளதுத. அடுத்து வரும் மூன்று வருடங்களிற்கு இதனை அமுல்படுத்துமாறு கோரியுள்ளது.
இதற்கான வேண்டுகோளிற்கு பதில் அளிப்பதற்கு பொதுமக்களிற்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கேள்விக்கொத்தில் விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சமூக ஊடக பாவனை முழுமையான வாழ்க்கை விபரங்கள் மற்றும் தாங்கள் வெளிநாடுகளிற்கு மேற்கொண்ட பயணங்கள் குறித்த கேள்விகள் காணப்படுகின்றன.
அமெரிக்காவில் குடியேற விரும்புவர்களிற்கான நடைமுறைகளை கடினமானதாக மாற்றும் நோக்கிலேயே இந்த கேள்விக்கொத்து தயாரிக்கப்பட்டுள்ளது
இதேவேளை இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.
விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சுயவிருப்பத்தின் பேரில் இந்த கேள்விகளிற்கு பதில் அளிக்கலாம் என இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த கேள்விகளிற்கு பதில் அளிக்க தவறினால் விசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவது தாமதமாகலாம் என்றும் தெரிவித்துள்ளது