மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் தீவு மீதான வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் சுற்றுலாத்துறை வணிகத்தில் தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் நிலவியுள்ளது.
ஆனால், தாம் பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்து பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தந்தவண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பாதுகாப்பு கவலைகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை இரத்து செய்யப்பட்டுள்ளதாக குவாமின் பிரதான கடற்கரை விடுதி ஊழியர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஆனால், தாக்குதல்களுக்கான சாத்தியம் நிலவுவதாக பசுபிக் தீவுகளில் அவரச வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அவ் அச்சுறுத்தலை பொருட்படுத்த போவதில்லை என பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க இராணுவத்தினர் முழு தயார்படுத்தலுடன் இருப்பதாக வடகொரிய ஜனாதிபதிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.