அமெரிக்காவில் பள்ளி மாணவனை வகுப்பறையில் கற்பழித்த பெண் ஆசிரியை ஒருவருக்கு சிறை தண்டனை விதித்தது மட்டுமின்றி அபாரதமும் செலுத்த வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓக்லோஹோமா மாகாணத்தில் உள்ள ஹோலிஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் Jennifer Caswell(31) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
ஜென்னிபரின் வகுப்பில் பெயர் வெளியிடப்படாத 15 வயது மாணவன் ஒருவனும் பயின்று வந்துள்ளான்.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு 15 வயது மாணவனை ஜென்னிபர் வகுப்பறையில் வைத்து கற்பழித்துள்ளார்.
இவ்விவகாரம் வெளியானதை தொடர்ந்து அவர் ஜென்னிபர் மீது பொலிசார் புகார் பதிவு செய்தனர்.
மேலும், அதே ஆண்டில் ஜென்னிபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
தற்போது McLoud நகரில் உள்ள சிறையில் ஆசிரியை தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், ஆசிரியையின் செயலால் தனது மகன் மன உளைச்சலில் இருப்பதாகவும், செல்லும் இடங்கள் எல்லாம் அவமானத்தை சந்திப்பதால் அவனை மற்றொரு பள்ளியில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், மகனை இந்த நிலைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக ஆசிரியை இழப்பீடு வழங்க வேண்டும் என பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கின் இறுதி வாதம் நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது, பெற்றோரின் வாதத்தில் உண்மை இருப்பதால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆசிரியை 1 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.