மக்கள் மத்தியில் எத்தனையோ மூட நம்பிக்கைகள் இருந்து வருகின்றன.சில நாடுகளுக்கென்று தனித்துவமான மூட நம்பிக்கைள் காணப்படுகின்றன. அதிலும் மலைவாழ் மக்களிடையே உள்ள நம்பிக்கைகள் விசித்திரமானவை.
அவ்வாறு ஒன்று தான் மடகஸ்கரில் மக்களிடையே உள்ள மூட நம்பிக்கையும்.
இவர்கள் இறந்த தங்களின் உறவினர்களின் உடல்களைத் தோண்டி எடுத்து, அவர்களுக்கு ஒரு கோலாகல விழா எடுக்கின்றார்கள்.
ஒரு வண்ணமிகு ஊர்வளம் நடத்திய பின்பு மீண்டும் புதைக்கும் ஒரு வினோத திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.
இந்த விழாவிற்கு “எலும்புகளைத் திருப்புதல்“ என பெயரிட்டுள்ளார்கள்.
இந்தச் சடங்கு மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களைத் தருவதாக கூறுகின்றனர்.
உறவினர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் ஒன்றிணையும் போது ஒரே மாதிரியான ஆடையினை உடுத்துகிறார்கள்.
இவ்வாறு சடங்கினை செய்வதன் மூலம் இறந்தவர்கள் மீன்டும் வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
கொண்டாட்டத்தின் முடிவில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் மீண்டும் பட்டுத்துணியினால் மூடப்பட்டு புதைக்கப்படுகிறது.
நிரந்தர உறக்கத்திற்காக கைகளால் செய்யப்பட்ட கல்லறையில் புதைக்கின்றனர்.