தான் ஆசையாய் வளர்க்கும் நாய் சுகவீனம் உற்று உள்ளதனால் தனக்கு இரண்டு நாள் வேலை விடுமுறை கேட்ட ஒருவரின் விவகாரம் இத்தாலியில் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.
‘குடும்பத்தின் அவசர தேவை’ காரணமாக தான் விடுமுறையினைக் கோருவதாக விண்ணப்படிவத்தில் எழுதியுள்ள விடயமே சர்சையினை தோற்றுவித்துள்ளது.
குடும்பம் என்ற அட்டவணைக்குள் எப்படி வளர்ப்பு நாயும் வரும் என்ற வாதம் நிறுவன தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு மிருகங்களை உரிய முறையில் பராமரிக்காமல் விட்டால் 10 ஆயிரம் யுறோ வரை தண்டம் விதிக்கப்படும் என்ற சட்டம் இத்தாலியில் உள்ளது.
இந்நிலையில் விடுமுறை கோரிய பணியாளருக்கு ஆதரவாக மிருக நல அமைப்புக்கள் களம் இறங்கியுள்ளதோடு, சட்டப் போராட்டத்துக்கு தாம் உதவத்தயார் என அறிவித்துள்ளன.
இத்தாலியில் 7.5 மில்லியன் பூனைகளும், 7 மில்லியன் நாய்களும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.