Loading...
பெண்களின் கல்விக்காக போராடிய மலாலா யூசுப்சாய் ஜீன்ஸ், ஹீல்ஸ் அணிந்து கொண்டு சாலையில் சென்றதாக கூறும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 2012ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்ட மலாலாவுக்கு லண்டனில் சிகிச்சை வழங்கப்பட்டது.
பெண்களின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததற்காக இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Loading...
இந்நிலையில் மாடர்ன் உடையில் ஜீன்ஸ், ஹீல்ஸ் அணிந்து சாலையில் சென்றதாக கூறி புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
இதைப் பார்த்த பாகிஸ்தானியர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் பலரும் ஆதரவாகவும் கருத்துகளை கூறிவருகின்றனர், எனினும் இது மலாலா யூசுப்சாய் தானா என இன்னும் உறுதியாகவில்லை.
Loading...