யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெண்களுக்கான அரசியல் பிரதிநித்துவத்தை வலியுறுத்தி அவர்களை தேர்ந்தெடுப்போம் வன்முறையை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் கையெழுத்து போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
இக் கையெழுத்து போராட்டமானது இன்று காலை 10 மணியளவில் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.
யாழில் பெண்களுக்கான அரசியல் பிரதிநித்துவத்தை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்!
இலங்கையின் பால்நிலை அடிப்படையிலான தேசிய குழுமமும் யாழ்.சமூக செயற்பாட்டு மையமும் இணைந்து இவ் விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இவ் வேலைத்திட்டத்தில் பங்குபற்றியிருந்த யாழ்.மவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் அகிலன் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் காணப்படும் பெண்கள் அளவிற்கு அரசியலில் பெண்களது பிரதிநிதிகள் குறைவாகவே உள்ளது.
குறிப்பாக நாட்டில் 52 வீதமான பெண்களில் பாராளுமன்றத்தில் 5 வீதமே உள்ளார்கள்.
யாழில் பெண்களுக்கான அரசியல் பிரதிநித்துவத்தை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்!
இவ்வாறு தீர்மானம் எடுக்கும் பொறுப்புக்களில் பெண்கள் குறைவாகவே உள்ளார்கள்.மேலும் பெண்கள் அரசியலுக்குள் வருவதற்கு முயற்சிக்கும் போது அவர்கள் மீது அவதுறா பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
இதன் காரணமாக அவர்கள் அரசியலுக்குள் வருவதற்கும் பின்நிற்கின்றார்கள். எனவே பெண்கள் மீதான வன்முறையை இல்லாமல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை பெண்கள் வன்முறையை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தொனிப்பொருளில் ஜந்து வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும் இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட பெண்கள் சிறுவர் பாதுகாப்பு பணிப்பாளர் கௌதமன், பால்நிலை சார் மற்றும் ஊடகநிலை வளவாளர் கிருத்திகா மற்றும் மதினிநெல்சன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.