Loading...
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபை தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை தொடர்பில் தற்போது கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருகிறது.
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
Loading...
இலங்கை மின்சார சபை பணியாளர்கள், மின்சார சபை தலைமையகத்தின் வளாகத்தில் ஆரம்பித்த இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
முறையற்ற விதத்தில் வேதன அதிகரிப்பு மற்றும் பணியாளர்களது மருத்துவ மற்றும் விசேட கொடுப்பனவு என்பனவற்றை நீக்குதல் என்பனவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...