நண்பர்களுடனும் வாழ்க்கைத்துணையுடனும் நேரம் செலவழிப்பதைவிட அதிக நேரம் மொபைல் போனுடன்உறவாடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி. இவ்வளவு காலமும் மொபைல்போனை தொடர்ந்து பயன்படுத்தினால்மூளையில் பிரச்சினைகள் ஏற்படும் என்று எச்சரிப்பவர்கள் ஒரு புறமும், அப்படியெல்லாம் இல்லை அதற்குஆதாரம் இல்லை என்பவர்கள் மறுபக்கமும் விவாத மேடைகளில் பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்க, இதோ ஆதாரம்கிடைத்தே விட்டது.
தனது 20 மணி நேர ரயில் பயணத்தில் படுத்துக்கொண்டே மொபைல் போனை பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு அதன் விளைவாக மூளையில் ஏற்பட்டஇரத்தக் கட்டிகளை அகற்றுவதற்கு மருத்துவர்கள் மூன்று மணி நேரம் போராடவேண்டியதாயிற்று.
மத்திய சீனாவிலுள்ள Henan Provinceஇலிருந்து தென் சீனாவிலுள்ள Guangzhou நகருக்கு பயணம் செய்த அந்த 47 வயது பெண் தனது நீண்ட பயணத்தின்போது நேரத்தைக் கடத்துவதற்காக தனது மொபைல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்தார். இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே உள்ள 800 முதல் 900 மைல் தொலைவைக் கடக்க அவருக்கு20 மணி நேரம் ஆகியது.
அவர் Guangzhouஐ அடைந்து இரயிலிலிருந்து இறங்கியதும்பிளாட்பாரத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்குMRIஸ்கேன் எடுக்கப்பட்டது. அவர் மயங்கி விழுந்ததற்கு காரணம் அவரது மூளையில் ஏற்பட்டுள்ள பல கட்டிகள்தான்என்பது கண்டறியப்பட்டது. விரைந்து அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்ற மருத்துவர்கள் மூன்று மணி நேரம்போராடி அவரது மூளையில்காணப்பட்ட வழக்கத்தை விட பெரிதாகத் தோன்றிய பல கட்டிகளை அகற்றினர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் இதற்கு முன் தாங்கள் அறுவை சிகிச்சை செய்துள்ள கட்டிகளை விட இவை பெரியதாக, சுமார் 2 சென்டி மீற்றர்அளவில் காணப்பட்டதாகத் தெரிவித்தனர்.
தனது மொபைல் போனுடன் விளையாடிய படியே 20 மணி நேரம் ஒரே நிலையில் படுத்திருந்ததால் இந்த கட்டிகள் உருவானதாக நரம்பியல் நிபுணர் ஒருவர் தெரிவித்தார். பெயர் வெளியிட விரும்பாத அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்கு பிறகு நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வேடிக்கை என்னவென்றால், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் மருத்துவமனையில் நேரத்தைக் கடத்துவதற்காக அந்தப் பெண் மொபைல் போனைத் தான் பயன்படுத்துகிறாராம்