கொல்கத்தாவுக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் காயமடைந்ததால், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, விளையாட மாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.
பதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நடந்து வருகிறது. முதல் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சென்னை, திரில்லிங் வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை, அணி, சொந்தமண்ணில் கொல்கத்தா அணியை நேற்று முன்தினம் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் சாம் பில்லிங்ஸின் அதிரடியில் சென்னை அணி வென்றது. போட்டியின் போது, சுரேஷ் ரெய்னா காயமடைந்தார். அவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரன் எடுக்க, ஓடுவதற்கு சிரமப்பட்டார். காயம் குணமடை யாததால் வரும் 15-ம் தேதி, பஞ்சாப் அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார்.
ஏற்கனவே, தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், பயிற்சியின் போது அடைந்த காயத்தால் கடந்த 2 போட்டிகளிலு ம் களமிறங்கவில்லை. முதல் போட்டியின்போது, மிடில் ஆர்டரில் கலக்கும் கேதர் ஜாதவ் காயமடைந்தார். இதன் காரண மாக தொடரில் இருந்து விலகியுள்ளார். டுபிளிசிஸும் காயமடைந்துள்ளார். கேதர் ஜாதவுக்கு பதில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி, சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி தொடங்கும் முன் முரளி விஜய் குணமாகிவிடுவார் என்றும் இதையடுத்து அவரும் வாட்சனும் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. ரெய்னா இடத்தில் அம்பதி ராயுடு களமிறங்குவார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னா, அதிரடி காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.