இன்று நமது பெண்கள் நிறையப் பேர் பேஸ்புக் கணக்கு வைத்துள்ளனர். அலுவலகத்தில், சமையலில், நடைப்பயிற்சியில், யாரிடமாவது பேசிக் கொண்டு இருக்கையில்… ஏன் குளியலறைக்குள் நுழையும் பொழுதும் தொலைபேசியை வைத்து பேஸ்புக்கை நோண்டும் பெண்கள்தான் அதிகம். அதுவும் குறைந்தது மணித்தியாலத்திற்கு ஒரு ஸ்ரேற்றஸ் தன்னும் போடாவிட்டால் நமது பெண்களுக்கு தூக்கம் வராது.
பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். உங்கள் விபரம் முழுதையும் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். புறபைல் உங்கள் படமாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கு மட்டும் அல்லது நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் பார்வையிடும் வகையில் உங்கள் புறபைல் ஜ வைத்து கொள்ளுங்கள்.
பெண்களுக்கு அதிகமாக நட்பு கோரிக்கைகள் வருவது சாதாரண விடயம் தான். ஆனால் அது முகம் தெரிந்த உங்கள் நெருங்கிய நண்பர்களாயின் உடனடியாகி இணைத்துக் கொள்ளலாம். இல்லையேல் அவருடைய பேஸ்புக் பக்கத்தை பார்த்து அவருடைய பதிவுகள் எவ்வாறு உள்ளது, சிறந்த பதிவுகளா என்பதை கணிப்பிட்டு, அவர் உங்களுக்கு குறும் செய்தி ஏதும் போடுகிறாரா என்று பார்;த்து, அந்த குறும் செய்தி மரியாதையானதாக இருப்பின் அவரை நண்பராக்கலாம். இல்லையேல் அவரை நீக்கிவிடவும்.
சிலரை நல்லவராக நினைத்து நீங்கள் இணைத்தீர்கள் என்று வையுங்களேன். தேவையற்ற இச்சை தூண்டும் படங்கள் வீடியோக்களை உங்களுக்கு “ரக்” பண்ணினாலோ அல்லது குறும்செய்தி மூலம் அனுப்பினாலோ அல்லது அனுப்ப முயன்றாலோ உடனடியாக அவரை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கி விடுங்கள்.
சிலபேர் இருக்கிறார்கள் அரியண்டம் பிடித்தவர்கள், சந்தேகம் பிடித்தவர்கள். நல்லவர்கள் போல அக்சன் போட்டு உங்களிடம் விடயம் கறக்க முயல்வார்கள். நீங்கள் உண்மையில் பெண்தானா? அப்படியாயின் ஒருபோட்டோ போடுங்கள், வொய்ஸ் மெசேச் அனுப்புங்கள், பார்த்துவிட்டு அழித்து விடுகின்றேன் என்றெல்லாம் சொல்வார்கள். நம்பி அனுப்பி விடாதீர்கள். ஒரு போட்டோவை வைத்து உங்கள் வாழ்க்கையை விளையாடி விடுவார்கள்.
இப்படி கேட்பவர்கள் உங்களை பிறண்ட் ஆக வைத்திருக்கும் நோக்கத்துடன் பேசவில்லை. வேறு எதையோ எதிர்பார்க்கின்றார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களிடம் போட்டோ கேட்டால்,‘என்னிடம் போட்டோ இல்லை. நான் பெண் என்பதை எனது கணவருக்கு நிரூபித்தால் போதும்’என்று நறுக்காக சொல்லி விடுங்கள். முகம் பார்த்து முகவரி பார்த்து வருவதில்லை நட்பு. உள்ளங்கள் இயைவது என்பதை விளங்க வையுங்கள். அதையும் மீறினால் உடனடியாக பிளக் செய்யுங்கள்.
அதேபோல் உங்கள் முகப் புத்தகத்திலும் நல்ல விடயங்களை பதிவிடுங்கள். செயார் செய்யுங்கள். அத்துடன் உங்கள் சமூகப் பிரச்சினைகளுக்கு முதலிடம் கொடுத்து பதிவிடுங்கள். உங்களுக்கு நம்பிக்கையானவராக தோன்றுபவர்களை மட்டும் பிறண்டாக வைத்திருங்கள். மற்றவர்களை தவிர்த்து விடுங்கள். நீங்கள் எளிதில் ஏமாறும் சுபாவம் உடையவராயின் ஒரு நண்பரை கென்போம் பண்ண முதல் நூறு தடைவ சிந்தியுங்கள். உங்கள் அறிவையும் திறமையையும் காதலிக்கும் வாழ்த்தும் ஊக்குவிக்கும் நண்பர்களே உண்மையான நண்பர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றய பாதுகாப்பற்ற உலகில் ஒவ்வொரு பெண்களும் எம்மை நாமே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அடுத்தவர்களிடம் நாம் பழகும் விதம் தான் எமது பாதுகாப்பில் தங்கியுள்ளது.
எனவே நல்லவர்களோடு நல்லவர்களாக பழகி பெண்கள் தம்மை தாமே பாதுகாக்க முயன்றாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடுமல்லவா?