புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளார்.
எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சீனா, ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் இந்தியா, பாக். உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.இந்ந அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் உள்ள கிங்தாவோ நகரில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் தலைமையில் 9-ம் தேதி நடக்கிறது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியது, பிரதமர்மோடி கலந்து கொள்ளும் இந்த மாநாட்டிற்கு பின் ஜிங்பிங் அளிக்க உள்ள விருந்தில் மோடி கலந்து கொள்கிறார்.
இந்த மாநாட்டில் பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்துதல் உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய பாக். எல்லையில் தொடர்ந்து அத்துமீறல் நடந்துவரும் நிலையில் இம்மாநாட்டில் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைனை பிரதமர் மோடி சந்தித்து பேசுவாரா? என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை