யாருக்கு தான் அழகாக ஆசை இல்லை எல்லோருக்கும் ஆசை இருக்கும் இதற்காக அழகு நிலையங்கள் சென்று பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்கிறோம் பலன் கிடைத்ததா என கேட்டால் இல்லை என்பது தான் பதில். அதற்கு பதில் இருக்கும் அழகையும் கெடுத்துக் கொள்கிறோம். நீங்கள் பலரது முகத்தை பார்க்கலாம்
அழகு நிலையம் செல்லும் வரை இருக்கும் அழகும் அதன் இருக்கும் அழகும் செயற்கைகள் சிலருக்கு விபரீதமாக கூட முடிந்துவிடும். அண்மையில் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் அழகு நிலையம் சென்று தன் அழகை கெடுத்துக்கொண்டார் அதன் பின் நண்பர்கள் கிண்டல் செய்ததால் தற்கொலையும் செய்துகொண்டார்.
இது போன்ற விபரீதங்கள் நிறையவே இடம் பெறுகின்றது. இதற்கு பார்க்க இலகுவாக அதே நேரம் கெமிக்கல் இன்றி வீட்டில் இருந்த படி எம் முகத்தை நாமே அழகு படுத்திக் கொள்ள முடியுமே. கொஞ்சம் நேரம் எடுத்தாலும் மன நிறைவோடு செய்து கொள்ளுதல் சிறப்பு தானே. ?
இன்று அழகாக தேவையான பொருட்களை முதலில் பார்ப்போம்.கடலை மா, பால் பவுடர், அல்லது பால், கொபி பவுடர். என்னடா டீ போட போறீங்களா என கேட்கிறீங்களா கிடையவே கிடையாது. உங்களுக்கு தெரியும் கடலை மா முகத்திற்கு மிகவும் சிறந்தது அதே போல் பால் இவை இரண்டுமே அழகை அள்ளிக் கொடுப்பவை அதனால் இவற்றை கொண்டே முகத்தை அழகு படுத்துவோம்.!
என்ன ரெடியா சரி இதனை ஆண் பெண் இரு பாலரும் பாவிக்கலாம், ஒன்று அல்லது இரண்டு நாளில் இதன் பலனை நீங்கள் அனுபவிக்கலாம். எந்த தீங்கும் ஏற்படாது அதே போல் நீங்கள் விரும்பிய நாளில் செய்யலாம் பிடிக்கவில்லை என்றால் விடலாம் விட்ட பின்பு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவே போவதில்லை.!