ஒரு பண்டைய மரண சடங்கு தளம், எலும்புக்கூடுகள் மற்றும் இதர கலைப்பொருட்கள் உள்ளிட்ட தொல்பொருட்களை வடமேற்கு பெருவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியில் சுமார் 600 தொடக்கம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருட்கள் மீட்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த காலப்பகுதியில் பெருவின் கடற்கரைக்கு அருகே வசித்த மனித நாகரீகங்களால் இந்த இந்த தளம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தலைமை ஆராய்ச்சியாளரான வொல்டர் அல்வா என்பவர் கூறுகையில், “மிக அற்புதமான கண்டுபிடிப்பு இந்த தளம் “டி” வடிவில் அமைந்துள்ளது. இது வேரி வலயத்தில் இருக்கும் ஒரு கோயிலின் சரியான நகலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வேரி செல்வாக்கு என்பது தொல்பொருள் அறிவியலாளர்கள் மொச்சிக்கா கலாச்சாரத்தின் முடிவு பற்றிய கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்ய தூண்டுகிறது.
தற்போதைய கஜமர்கா மற்றும் வேரி கலாச்சாரங்கள் ஆகியவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அந்த பகுதிக்குள் நுழைந்துள்ளமையை இந்த தொல்பொருள் ஆய்வுப் பொருட்கள் சுட்டிக்காட்டுகின்றன.