பெங்களூரில் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் பெங்காலை வீழ்த்தி பாட்னா அணி அபார வெற்றி பெற்றது.
12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பால்டனுடன் மோதியது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதல் தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் முதல் பாதியில் 18-11 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் சுதாரித்துக் கொண்ட புனே அணியினர் 17-18 என நெருக்கடி தந்தனர். ஆனாலும் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது.
இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 36 – 26 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி, முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா என 11 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6ம் இடத்தைப் பிடித்துள்ளது.