மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக வருமானம் எங்கிருந்து கிடைக்க போகிறது என செய்தியாளர்கள் நிதியமைச்சரிடம் கேட்ட போது, அவரால் அதனை கூற முடியவில்லை.
வருமானம் இன்றி நிவாரணத்தை வழங்குவது என்பது மத்திய வங்கி பணத்தை அச்சிட்டே நிவாரணத்தை வழங்குகிறது என்றே அர்த்தம். மத்திய வங்கி பணத்தை அச்சிட்டு, நிவாரணத்தை வழங்குவது நியாயமானதா?
வருமானமின்றி பணத்தை அச்சிட்டு நிவாரணம் வழங்கினால், பணவீக்கம் அதிகரிக்கும். பண வீக்கம் அதிகரித்தால், பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.
பொருட்களின் விலைகள் அதிகரித்தால், இந்த 5 ஆயிரம் ரூபாய் போதுமா என்ற கேள்வி எழும். இப்படியான சூழ்நிலையில், ரூபாய் மதிப்பிழந்து, எதிர்காலத்தில் ஆபிரிக்க நாடுகளில் போன்று பணத்தை வீல்பரோ வண்டிகளிலேயே கொண்டு செல்ல நேரிடும் எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.








































